டெல்லியில் புதிதாக 2,860- பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் இன்று புதிதாக 2,860 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-09 16:44 GMT
புதுடெல்லி,

டெல்லியில் இன்று புதிதாக 2,860 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3,03,693 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 39 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 5,692 ஆக உயர்ந்துள்ளது. இன்று தொற்றில் இருந்து 3,098 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 2,76,046 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 21,955 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

மேலும் செய்திகள்