இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,366- பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-23 04:47 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வந்த கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரத்து 366- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 77 லட்சத்து 61 ஆயிரத்து 312-ஆக உயர்ந்துள்ளது.  

அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 690 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 306- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 69 லட்சம் பேர் குணம் அடைந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புடன் நாடு முழுவதும் 6 லட்சத்து 95 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்