கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,983- பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 983- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-31 13:33 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 983- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல்,  ஒரே நாளில்  7 ஆயிரத்து 330- பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

கேரளாவில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 33 ஆயிரமாக உள்ளது. இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் குணம் அடைந்த நிலையில், 91 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர்.  

தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 27 பேர்  உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,484- பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் செய்திகள்