மராட்டியத்தில் இன்று 4,132- பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் இன்று 4,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-13 16:22 GMT
மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.  இன்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, மாநிலத்தில் புதிதாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,132- ஆக பதிவாகியுள்ளது.  தொற்று பாதிப்பால் இன்று மட்டும் 127- பேர் உயிரிழந்துள்ளனர். 

மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 40 ஆயிரத்து  461- ஆக உள்ளது.  தொற்று பாதிப்புடன் 84 ஆயிரம் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து 16 லட்சத்து 09 ஆயிரத்து 607- பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்து 809- ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்