ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியான மாநிலங்களவை இடத்துக்கு டிசம்பர் 14-ந் தேதி இடைத்தேர்தல்

ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியான மாநிலங்களவை இடத்துக்கு டிசம்பர் 14-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Update: 2020-11-19 23:16 GMT
புதுடெல்லி, 

மத்திய மந்திரியாக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் கடந்த மாதம் 8-ந் தேதி காலமானார். அவர் பீகாரில் இருந்து கடந்த ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது பதவிக்காலம், 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைய இருந்தது. இந்த நிலையில், ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியாக உள்ள அந்த மாநிலங்களவை இடத்துக்கு டிசம்பர் 14-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல், வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. போட்டி இருக்கும்பட்சத்தில், டிசம்பர் 14-ந் தேதி தேர்தல் நடந்து அன்று மாலையே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

மேலும் செய்திகள்