பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீர மரணம்

பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்தனர்.

Update: 2020-11-26 13:48 GMT
ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே  பரிம்போரா என்ற இடத்தில் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி காரில் இருந்த 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் படுகாயமடைந்த 2 வீரர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தனர்

மக்கள் கூட்டமாக இருந்ததால் பயங்கரவாதிகள் மீது உடனடியாக பாதுகாப்பு படை வீரர்களால் பதிலடி தாக்குதல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து தாக்குதல் நடந்த பகுதியை சீல் வைத்து, பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும் போது காயமடைந்த வீரர்கள் அருகிலுள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
நெரிசலான பகுதியாக இருப்பதால், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க நமது படைகள் கட்டுப்பாட்டை கடைபிடித்தனர் என கூறினார்.

மேலும் செய்திகள்