டெல்லியில் விவசாயிகள் போராட்டம்; போலி செய்திகளை தடுக்க திட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளியாகும் போலி செய்திகளை எதிர்க்கொள்ள விவசாயிகள் தரப்பில் ஐ.டி.பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இணையதளங்களில் வெளியாகும் உண்மைக்கு மாறான செய்திகளை கண்காணித்து பதிலளிக்க சுமார் 70 பேர்களை கொண்ட குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
விவசாயிகள் சார்பில் இதற்காக பேஸ்புக், டுவிட்டர் மற்றும் பிற சமூக வலைதளங்களில் கிஷான் எக்தா மோர்ச்சா என்ற பெயரில் உருவாக்கியிருக்கும் பக்கத்தில் பலரும் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.