இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,645 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

Update: 2021-01-10 04:24 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப காலங்களாக குறைந்து வருகிறது.  இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 18,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 50 ஆயிரத்து 284 ஆக உயர்வடைந்து உள்ளது.  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 335 ஆக உள்ளது.

இதேபோன்று நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதன்படி, இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 75 ஆயிரத்து 950 ஆக உயர்ந்து உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 201 பேர் உயிரிழந்து உள்ளனர்.  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 999 ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்