கடலோர பகுதிகளில் இந்திய கடற்படை இன்றும், நாளையும் பிரமாண்ட பயிற்சி
நாட்டின் கடலோர பகுதிகளில் இந்திய கடற்படை இன்றும், நாளையும் பிரமாண்ட பயிற்சியில் ஈடுபட உள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் கடலோர பகுதிகளில் இந்திய கடற்படை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘கடல் கண்காணிப்பு’ என்ற பெயரில் பிரமாண்ட கடலோர பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த தடவை இப்பயிற்சி இன்றும், நாளையும் நடக்கிறது. நாட்டின் 7 ஆயிரத்து 516 கி.மீ. நீள கடலோர பகுதிகளில் பயிற்சி நடக்கிறது. 13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பயிற்சி நடக்கிறது.