மத்திய பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Update: 2021-02-01 06:05 GMT
புதுடெல்லி,

நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல்  செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
  • நகர்புற தூய்மை திட்டத்துக்கு 1.41 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • சுயசார்பு சுகாதார திட்டத்திற்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீடு
  • விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சி
  • கொரோனாவுக்கு எதிரான மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும்.
  • மத்திய பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு
  • கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி
  • பெரும் தொற்று ஏற்படும் என நாம் கற்பனை செய்து பார்க்கவில்லை

மேலும் செய்திகள்