அரியானாவில் விவசாயிகள் போராட்டத்தின் போது சரிந்து விழுந்த மேடை

அரியானாவில் விவசாயிகள் போராட்டத்தின் போது மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-02-03 19:53 GMT
ஜிந்த், 

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அரியானாவின் ஜி்த் பகுதியில் உள்ள கன்டேலா என்ற கிராமத்தில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் பாரதீய கிஷான் சங்கத்தலைவர் ராகேஷ் திகைத் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று பங்கேற்றனர்.

அளவுக்கு அதிகமானவர்கள் மேடையில் ஏறியதால் எடை தாங்காமல் மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதனால் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நிலைகுலைந்தனர். உடனே அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்