உத்தரபிரதேசத்தில் பயங்கர விபத்து: லாரி - ஜீப் மோதல்; 6 பேர் பலி

உத்தரபிரதேசத்தின் ஜவுன்பூர் மாவட்டம் ஜலால்பூர் பகுதியில் உள்ள வாரணாசி-ஜவுன்பூர் நெடுஞ்சாலையில், உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 17 பேர் ஜீப் ஒன்றில் நேற்று வந்து கொண்டிருந்தனர்.

Update: 2021-02-09 19:05 GMT
அப்போது எதிரில் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஜீப் மீது பயங்கரமாக மோதியது.இதில் ஜீப் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 11 பேர் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

விபத்துக்கு காரணமாக லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்