விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து 8 பேர் பலி

விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியானார்கள்.

Update: 2021-02-12 15:54 GMT
விசாகபட்டினம்

ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அனந்தகிரி கிராமத்திற்கு அருகே ஒரு சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில்  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.

ஐதராபாத்தின் தினேஷ் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுற்றுலாப் பேருந்து அனந்தகிரி கிராமத்திற்கு அருகிலுள்ள டுமுகு குக்கிராமத்தின் அருகே சாலையில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக பஸ் செங்குத்தான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. 

இந்த பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். காயமடைந்த சில பயணிகளின் நிலைமை ஆபத்தானதாக உள்ளதாக  கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸில் விசாகப்பட்டினம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்