மராட்டியத்தில் ரூ.12.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

மராட்டியத்தில் ரூ.12.5 கோடி மதிப்பிலான மெபிடிரோன் என்ற போதை பொருளை கடத்திய நபரை போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-02-21 17:09 GMT
புனே,

மராட்டியத்தின் மும்பை நகரில் டோங்ரி பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான நபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  இதில், அவர் சட்டவிரோத போதை பொருள் ஒன்றை கடத்தியது தெரிய வந்தது.

தொடர்ந்து அவரிடம் இருந்து 25 கிலோ எடை கொண்ட ரூ.12.5 கோடி மதிப்பிலான மெபிடிரோன் என்ற போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  அந்நபரிடம் இருந்து ரூ.5 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டது.  இதன்பின்னர் அந்நபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்