உத்தர பிரதேசத்தில் லாரி மற்றும் கார் மோதல்; 8 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2021-03-11 03:02 GMT
ஆக்ரா,

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் எத்மதவுலா பகுதியில் இன்று காலை லாரி மற்றும் கார் ஒன்று திடீரென மோதி விபத்திற்குள்ளானது.  இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.  இதுதவிர 4 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்து போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர்.  விபத்தில் காயமடைந்தோர் உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு போத்ரே ரோகன் பிரமோத் கூறும்பொழுது, முதற்கட்ட விசாரணையில், நாகலாந்தில் இருந்து லாரி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.  காரின் பதிவு எண் ஜார்க்கண்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார்.  இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்