அகமதாபாதில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கரத் தீ விபத்து
அகமதாபாதில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.
அகமதாபாத்
குஜராத் மாநிலம் அகமதாபாத் வத்வாவில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.
36 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு 150க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க பல மணி நேரம் போராடினர். ஆலையில் உள்ள கொதிகலன்களில் ஒன்று வெடித்து தீப்பிடித்தது.
அருகில் இருந்த ஆலைகளுக்குத் தீ பரவாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை மேற்கொண்ட பின்னர் தீயை போராடி அணைத்தனர். இவ்விபத்தில் பெரும் பொருட்சேதம் ஏற்பட்ட போதும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.