தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத்பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-03-29 06:32 GMT
மும்பை

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத்பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவை அடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சரத்பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பித்தப்பையில் கல்  இருப்பது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அதற்காக மார்ச் 31 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அவரது கட்சி இன்று தெரிவித்துள்ளது.புற்றுநோயில் இருந்து  தப்பிய 80 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் 2004 ஆம் ஆண்டில் இதய நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் வெளியிட்டு உள்ள டுவிட்டில்  பவார் நேற்று மாலை வயிற்றில் சிறிது வலியை உணர்ந்ததாகவும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவரது பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரியவந்தது.  மேலதிக அறிவிப்பு வரும் வரை அவரது அனைத்து  நிகழ்ச்சிகளும் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கூறி உள்ளார்.


மேலும் செய்திகள்