பஞ்சாபில் மேலும் 2,452- பேருக்கு கொரோனா

பஞ்சாபில் மேலும் 2,452- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update:2021-03-31 23:19 IST
அமிர்தசரஸ்,

பஞ்சாபில் மேலும் 2,452- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 2,788- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

பஞ்சாபில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 39 ஆயிரத்து 734- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 09 ஆயிரத்து 034- ஆக உள்ளது.

 தொற்று பாதிப்புடன் 23 ஆயிரத்து 832- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,868- ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்