மத்திய பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
மத்திய பிரதேசத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இன்று பிற்பகல் 12.53 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஷாஹ்டோல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.