டெல்லியில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா வேகமாக பரவுகிறது: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா வேகமாக பரவுவதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-13 09:53 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,500- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரவிந்த்  கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், “ டெல்லியில் கொரோனாவின் 3-வது அலையின் போது ஒருநாளில் 8,500- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதே உச்சபட்ச எண்ணிக்கையாக இருந்தது. 

ஆனால், 4-வது அலையில் 13,500- பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவின் 4-வது அலை மிகவும் அபாயகரமானதாக உள்ளது. கொரோனாவின் 4-வது அலையில் இளைஞர்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அவசியம் இன்றி இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வெளியே செல்லும் பட்சத்தில் கொரோனா விதிகள் அனைத்தையும் தவறாது பின்பற்ற வேண்டும்” என்றார். 

மேலும் செய்திகள்