டெல்லியில் வார இறுதி நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது- போலீசார் தீவிர கண்காணிப்பு

டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Update: 2021-04-16 19:07 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி,  இன்று இரவு டெல்லியில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.  திங்கள் கிழமை காலை 5 மணி வரை இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும். 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, டெல்லியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபடுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 19 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்