டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

டெல்லியில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் மட்டும் 167 - பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-04-17 17:41 GMT
Photo Credit: PTI
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் வர மறுக்கிறது. 

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 375- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒரேநாளில் 167- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 15,414- பேர் குணம் அடைந்துள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 27 ஆயிரத்து 998- ஆக உள்ளது. 

தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 46 ஆயிரத்து 239- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 69 ஆயிரத்து 799- ஆக உள்ளது.  டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 960- ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்