கோவா மாநிலத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் - கோவா அரசு

கோவா மாநிலத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-04-21 13:19 GMT
கோவா,

இந்தியாவில் கொரோனாவின் இத்தகைய கோரத்தாண்டவத்தால் நாடு முழுவதும் பயங்கரமான சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம், மக்கள் இயங்குவதற்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொரோனாவுக்கும், மக்களுக்குமான இடைவெளியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கோவா மாநிலத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. திரையரங்குகள், பார்கள், உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என கோவா அரசு தெரிவித்துள்ளது

மேலும் செய்திகள்