கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தார் உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தார்.

Update: 2021-04-27 07:37 GMT
ஸ்ரீநகர்,

தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா  கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளார்.  உமர் அப்துல்லா கடந்த 9 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். 

இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட உமர் அப்துல்லா, 18 நாட்கள் கழித்து மீண்டும் மறு பரிசோதனை செய்தார். இதில், அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.  

இது தொடர்பாக உமர் அப்துல்லா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மூக்கடைப்பைத் தவிர வேறு எந்த அறிகுறிகளும் எனக்கு இல்லை.  கடந்த 18 நாள்களுக்கு பின்பு இன்று சோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.” என்று தெரிவித்துளார். 

மேலும் செய்திகள்