அசாமில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

அசாமில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

Update: 2021-05-01 16:06 GMT
கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் இரவு 8.09 மணியளவில் லேசான  நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.3ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேஜ்பூரில் இருந்து மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

எனினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அசாமில் கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்