கேரளாவில் நேற்றை விட இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைவு

கேரளாவில் இன்று ஒரேநாளில் 38 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-07 14:59 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் நேற்று 42 ஆயிரத்து 464 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. ஆனால், கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. 

அந்த வகையில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் 38 ஆயிரத்து 460 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 24 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 650 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 26 ஆயிரத்து 662 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 16 ஆயிரத்து 177 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இன்று 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்