இந்தியாவில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 17 கோடியை தாண்டியது

இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 16.94 கோடியாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-05-09 08:52 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பல்வேறு வகையான பயனாளர்களை அடையாளம் கண்டறிந்து இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே 1 ஆம் தேதி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிவேகத்தில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது 2-வது அலை நாட்டில் வேகமெடுத்துள்ளதால் தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை மத்திய-மாநில அரசுகள் மேலும் அதிகரித்து இருக்கின்றன. இதன் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். 

அந்த வகையில் நேற்று மட்டும் 16,722 அமர்வுகளில் 20 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 16.94 கோடியாக உள்ளது எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்