பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகளை வாங்க கர்நாடக அரசு ஆலோசனை

பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகளை வாங்க கர்நாடக அரசு ஆலோசனை செய்து வருகிறது.

Update: 2021-05-12 11:56 GMT
பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் காணப்படுகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.  இந்த நிலையில், பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகளை வாங்க கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. 

தடுப்பூசி பற்றாக்குறை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், சர்வதேச டெண்டர் மூலம் தடுப்பூசி வாங்க கர்நாடகா முடிவு செய்துள்ளது. 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது. 

மேலும் செய்திகள்