தெலுங்கானா, உத்தர பிரதேச மாநிலங்களின் கொரோனா பாதிப்பு விவரம்

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் சற்று தணியத்தொடங்கியுள்ளது.

Update: 2021-05-31 16:43 GMT
லக்னோ,

உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில்1497- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 5491- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 151- பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 37,044- ஆக உள்ளது. 

மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1205- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5023- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 23,390- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தெலுங்கனாவில் மேலும் 2524- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 3464- பேர் குணம் அடைந்துள்ள நிலையில் 18- பேர் உயிரிழந்துள்ளனர்.  

மேலும் செய்திகள்