கேரளாவில் மேலும் 14,233-பேருக்கு கொரோனா
கேரளாவில் மேலும்14,233- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,233- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 173- பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து 15,355- பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய 1 லட்சத்து 07 ஆயிரத்து 096- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 13.29 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரமாக உள்ளது.