கேரளாவில் இன்று மேலும் 11,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று மேலும் 11,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-13 14:19 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 11,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாநிலத்தில்இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,98,214 ஆக உயர்ந்துள்ளது.

மாநில முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 206 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,181 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 17,856 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25,93,625 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,23,003 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்