காஷ்மீர்: எல்லையோரம் செயலிழந்த நிலையில் கிடந்த ட்ரோன் விமானம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையோரம் செயலிழந்த நிலையில் கிடந்த டிரோன் விமானத்தை போலீசார் கைப்பற்றினர்.

Update: 2021-06-15 09:30 GMT
ஸ்ரீநகர்,

இந்திய - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் கடந்த சில நாட்களாக எந்தவித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை.

ஆனாலும், இந்திய வீரர்களின் நிலைகளை கண்காணிக்க பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது கேமரா பொறுத்திய ட்ரோன் விமானங்கள் எல்லை தாண்டி இந்திய எல்லைக்குள் பறக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களும் டிரோன் மூலம் சப்ளை செய்யப்படுகிறது.   

இந்நிலையில், ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியான அக்நூர் செக்டாரில் உள்ள ஹரோடா பகுதியில் செயலிழந்த நிலையில் கிடந்த ட்ரோன் விமானத்தை ஜம்மு-காஷ்மீர் போலீசார் இன்று கண்டுபிடித்தனர்.

செயலிழந்த நிலையில் கிடந்த அந்த ட்ரோன் விமானத்தை கைப்பற்றிய போலீசார் இது யாரால் இயக்கப்பட்டது? பாகிஸ்தானில் இருந்து வந்ததா? டிரோன் விமானம் மூலம் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீரில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டனவா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்