கோவாவில் இன்று 241 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கோவாவில் தற்போது 1,848 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனாஜி,
கோவா சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அங்கு இன்று புதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. இதனால் கோவாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,68,716 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,097 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் 241 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதனால் கோவாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,63,771 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கோவாவில் தற்போது 1,848 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.