மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்
மணிப்பூரில் இன்று மாலை 4.28- மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இம்பால்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இன்று மாலை 4.28- மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.