இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,342- பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 38,470- பேர் குணம் அடைந்துள்ளனர்.

Update: 2021-07-23 04:06 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,342- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: - 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,342- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 38,740- பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர். 

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,05,513- ஆக குறைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.12 சதவிகிதமாக உள்ளது. கடந்த 32-நாட்களாக தொற்று பாதிப்பு விகிதம்  3 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ளது.  

கொரோனா மீட்பு விகிதம் 97.36-சதவிகிதமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 483- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 19 ஆயிரத்து 470- ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்