ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை காஷ்மீர் செல்கிறார்

பாகிஸ்தான் நாட்டுடனான கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளார்.

Update: 2021-07-24 11:25 GMT
புதுடெல்லி,

பாகிஸ்தான் நாட்டுடனான கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாளை தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளார்.

22ஆவது கார்கில் வீரர்கள் நினைவு தினத்தையொட்டி ஜூலை 26ஆம் தேதி கார்கில் நினைவிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜனாதிபதி மரியாதை செலுத்த உள்ளார். மேலும் லடாக்கில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27-ந் தேதி, மாதா வைஷ்ணோ தேவி குகைக்கோவிலுக்கு அவர் செல்வார் என்று தெரிகிறது. அதே நாளில் அவர் டெல்லி திரும்புகிறார்.

ஜனாதிபதி வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கீழ்நிலை பணியாளர்கள் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்