நாடாளுமன்றத்தில் கடும் அமளி: எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு வெங்கையா நாயுடு எச்சரிக்கை

மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கும் எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என வெங்கய்யா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-08-04 07:49 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை தொடங்கி 11 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றனர். இன்று எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திக்கப்பட்டது. 

இந்தநிலையில் மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கும் எதிர்கட்சிகள் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். மாநிலங்களவையை முடக்கும் எம்.பி.பிக்களின் பட்டியல் வெளியிடப்படும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்