கேரளத்தில் புதிதாக 22,414 பேருக்கு கொரோனா தொற்று

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 22,414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-08-04 12:56 GMT
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று பாதிப்புடன் 1,76,048 பேர்  சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று  108 பேர் பலியானார்கள். 

இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 17,212ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 19,478 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 32,77,788 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்