மிசோரத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

மிசோரம் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது.;

Update:2021-08-09 22:37 IST
அய்சால்,

மிசோரம் மாநிலத்தில் இன்று இரவு 9.18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் தென்ஷாயல் என்ற பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. 

ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. ஆனாலும், நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.   

மேலும் செய்திகள்