புதுச்சேரியில் மேலும் 114 பேர் கொரோனா
புதுச்சேரியில் மேலும் 114 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.;
புதுச்சேரி, ஆக.
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 924 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 205 பேர், வீடுகளில் 661 பேர் என 866 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 98 பேர் குணமடைந்தனர். அதே நேரத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,801 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.81 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர் ஒருவர், முன்கள பணியாளர் ஒருவர், பொது மக்கள் 3 ஆயிரத்து 271 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை மாநிலத்தில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 352 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.