டெல்லி என்கவுண்ட்டரில் 2 பேர் சுட்டு கொலை: 2 போலீசார் காயம்; ஆயுதங்கள் பறிமுதல்

டெல்லியில் போலீசார் என்கவுண்ட்டர் நடத்தி 2 பேரை சுட்டு கொன்று ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2021-08-12 07:03 GMT


புதுடெல்லி,

டெல்லியின் கஜுரி காஸ் பகுதியில் இன்று காலை போலீசார் என்கவுண்ட்டர் நடத்தியுள்ளனர்.  இந்த சம்பவத்தில் 2 பேரை சுட்டு கொன்றனர்.

அவர்களிடம் இருந்து தானியங்கி பிஸ்டல்கள், 4 மேகசின்கள் மற்றும் 15 வெடிக்காத நிலையிலுள்ள தோட்டாக்கள் ஆகியவற்றையும் கைப்பற்றி உள்ளனர்.

இந்த என்கவுண்ட்டரில் 2 போலீசார் காயம் அடைந்து உள்ளனர்.  இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்