டெல்லியில் அமெரிக்க தூதரகத்தில் விபத்து; 2 பேர் உயிரிழப்பு

டெல்லியில் அமெரிக்க தூதரகத்தில் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2021-08-14 00:13 GMT


புதுடெல்லி,

டெல்லியில் அமெரிக்க தூதரகத்தில் கட்டுமான பணிகள் நடந்து வந்தன.  இதில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அவர்கள் காஞ்சன் (வயது 32) மற்றும் பாபுலால் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  முகேஷ் (வயது 33) என்பவர் காயங்களுடன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அனைவரும் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர்.



மேலும் செய்திகள்