டெல்லியில் அமெரிக்க தூதரகத்தில் விபத்து; 2 பேர் உயிரிழப்பு
டெல்லியில் அமெரிக்க தூதரகத்தில் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் அமெரிக்க தூதரகத்தில் கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இதில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அவர்கள் காஞ்சன் (வயது 32) மற்றும் பாபுலால் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். முகேஷ் (வயது 33) என்பவர் காயங்களுடன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அனைவரும் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர்.