இந்தியாவில் இதுவரை 50.26 கோடி கொரோனா பரிசோதனை

இந்தியாவில் இதுவரை 50.26 கோடி கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

Update: 2021-08-20 06:38 GMT



புதுடெல்லி,

நாட்டில் கொரோனா 2வது அலையில் முதல் அலையை விட அதிக பாதிப்புகள் காணப்பட்டன.  இந்நிலையில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் பல்வேறு மாநிலங்களில் குறைந்து ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 18,86,271 கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து உள்ளது.

இதன்படி, நேற்று வரை (ஆகஸ்டு 19ந்தேதி) நாடு முழுவதும் மொத்தம் 50 கோடியே 26 லட்சத்து 99 ஆயிரத்து 702 கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்