திருமணமான ஆணுடன் கள்ளத்தொடர்பு: பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து நிர்வாண ஊர்வலம்

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் செல்ல வைத்தனர். அந்த பெண், திருமணம் ஆனவர். திருமணமான ஒரு ஆணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

Update: 2021-08-22 05:09 GMT
இருவரும் ஊரை விட்டு ஓடினர். கடந்த புதன்கிழமை இரவு பிடிபட்டனர். இதையடுத்து, கள்ளக்காதலனின் மனைவி குடும்பத்தினர் அந்த பெண்ணை அடித்து உதைத்தனர்.அவரது கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தனர். ஆடைகளை களைந்து நிர்வாணமாக கிராமம் முழுவதும் ஊர்வலம் செல்ல வைத்தனர். இதுதொடர்பாக அப்பெண் அளித்த புகாரின்பேரில், 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில், கள்ளக்காதலன், அவருடைய மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மீதி 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கள்ளக்காதலன் குடும்பத்தினர், தன்னிடம் இருந்த ரூ.25 ஆயிரத்தை பறித்துக் கொண்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்