விவசாயிகள் மீதான தடியடியை கண்டித்து பஞ்சாபில் சாலை மறியல் போராட்டம்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் விவசாயிகள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-29 11:03 GMT
லூதியானா,

அரியானாவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த விவசாயிகள் மீது  போலீசார் தடியடி நடத்தினர். போலீசாரின் தடியடியில், விவசாயிகள் 10 பேர் காயம் அடைந்தனர். விவசாயிகள்  மீதான தடியடிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.  

இந்தநிலையில்,  பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் விவசாயிகள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அரியானாவின் கர்னால் பகுதியில் விவசாயிகள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து  போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.  விவசாயிகள் போராட்டத்தையடுத்து, போலீசார் தேவையான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். வாகன போக்குவரத்தும் திருப்பி விடப்பட்டது. 

மேலும் செய்திகள்