டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை ஆங்கிலேயர் கால சுரங்கபாதை

டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை சுரங்கபாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தயார் செய்யப்படும்

Update: 2021-09-03 12:31 GMT
புதுடெல்லி

டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை சுரங்கபாதை இருப்பது ண்டறியப்பட்டுள்ளது. சுதந்தரப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்கள் அந்த சுரங்கத்தை பயன்படுத்தியிருக்கலாம் என டெல்லி சட்டசபை  சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார். தற்போது சுரங்கப் பாதையின் முகப்பு பகுதியை கண்டறிந்துள்ளதாகவும், விரைவில் புனரமைப்பு செய்து அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தயார் செய்யப்படும் என  ராம்நிவாஸ் கோயல் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்