பபானிபூர் தொகுதி இடைத்தேர்தல்: முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று வேட்புமனு தாக்கல்

பபானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

Update: 2021-09-10 03:29 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பவானிபூர் தொகுதியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைன், சாம்செர்காஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில், பபானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். நந்திகிராமில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்ற மம்தா பானர்ஜி பபானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் செய்திகள்