மொபைல் கேம் விளையாடுவதில் சகோதரருடன் தகராறு; எலி விஷம் குடித்து சிறுமி தற்கொலை

மொபைல் கேம் விளையாடுவதில் சகோதரருடன் ஏற்பட்ட தகராறில் எலி விஷம் குடித்து 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-12 20:00 GMT

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் ஜனுபாத பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமி மொபைல் கேம் விளையாடுவதில் தனது சகோதரருடன் சண்டையிட்டு உள்ளார்.  இதில், ஒரு கட்டத்தில் அந்த சிறுமி ஆத்திரத்தில் மருந்து கடைக்கு சென்று எலி விஷம் வாங்கி வந்து உள்ளார்.

அதனை தன்னுடைய சகோதரனின் முன்னிலையில் சாப்பிட்டு உள்ளார்.  இதுபற்றி அந்த சகோதரன் குடும்பத்தினரிடம் தெரிவித்து உள்ளான்.  அவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  எனினும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்து உள்ளார்.  இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்