பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 3 பேர் கைது

பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-09-13 23:47 GMT

கயா,

பீகாரில் கயா நகரில் முபாசில் பகுதியில் போதை பொருள் கடத்தப்படுகிறது என கிடைத்த ரகசிய தகவலை அடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், சந்தேகத்திற்குரிய வகையிலான 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.  இதில் அவர்களிடம் போதை பொருள் இருந்தது தெரிய வந்தது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  2.2 கிலோ எடை கொண்ட பிரவுன் சுகர் எனப்படும் போதை பொருளின் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.  3 பேரையும் கைது செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்