உத்தர பிரதேசத்தில் 130 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட நபர்
உத்தர பிரதேசத்தில் 130 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பில் இருந்து நபர் ஒருவர் விடுபட்டு உள்ளார்.
மீரட்,
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் வசித்து வருபவர் விஷ்வாஸ் சைனி. இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 130 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் அதிலிருந்து விடுபட்டு உள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, சிகிச்சை பெற்று நீண்ட நாட்களுக்கு பின்பு வீட்டுக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த நிலையில் வருத்தமடைந்தேன். ஆனால், என்னுடைய மருத்துவர் ஊக்கம் அளித்து கொண்டே இருந்ததுடன், குணமடைவதில் கவனம் செலுத்தும்படி கூறினார்.
கடந்த ஏப்ரல் 28ந்தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.